எ-டு: ஒன்பதினாயிரம் எனவரும். இச்சூத்திரத்திற்கு முன்னர் எட்டு என்பது ஆயிரத்தொடு புணர்தற்குரிய விதி கூறிய சூத்திரம் இருந்திருத்தல் வேண்டும். அதுகாணாமையான் இச்சூத்திரத்து ‘‘உருவுநிலை திரியாது’’ என்றதனான் எட்டென்பதன் ஒற்றுத்திரியாமல் எண்ணாயிரம் எனப்புணரும் எனக் கொள்க. |