சூ. 473 :அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும் 
(68)
 

க-து:

நூறு என்னும் சொல்  ஒருபஃது  முதலியவற்றொடு  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  ஒருபஃது,   இருபஃது   என   ஒன்று   முதலாயவற்றைத்
தொடர்ந்த தொகைச் சொற்கள் நூறு என்பதன் முன்வந்து  புணருமிடத்தும்
மேற்கூறிய  செய்கைத்தாய்   முடியும்.   அஃதாவது   ஈறுசினை   ஒழியா
இனஒற்றுமிகும் என்றவாறு.
 

எ-டு:  நூற்றொருபஃது,  நூற்றிருபஃது,   நூற்றுமுப்பஃது   எனவரும்.
தொண்ணூறு  என்பது   பஃதூர்ந்த   திரிபேயாகலின்  அதுவும்  அடங்க
இம்மாட்டேறு நின்றது. அது நூற்றுத் தொண்ணூறு எனவரும். இம்மாட்டேறு
இருநூற்றொருபஃது,   முந்நூற்றொருபஃது  என  அடையடுத்து  நிற்பினும்
பொருந்தும்.