போலும் என்னும் இவ்விடைச்சொல் வடிவத்தான் ‘‘செய்யும்’’ என்னும் முற்றுப்போறலின், செய்யுமென்னும் முற்று வாய்பாட்டான் வரும் பிற சொற்களும் விகாரப்பட்டு ஈரொற்றாய் இறுதிக்கண் வருதலை ‘‘உரையிற்கோடல்’’ என்னும் உத்தியாற் கொள்க. எ-டு மருளினும் எல்லாம் மருண்ம், கட்சியுட் காரி கலுழ்ம் எனவரும். |