க-து:
பொருள்:மொழிமுதற்கண் அகரமும் இகரமும் இணைந்து ஐகாரத்திற்குமாற்றெழுத்துக்களாகும். மாற்றெழுத்தினைப் போலி எழுத்தென்பதுஇடைக்கால வழக்காகும்.
எ-டு: ஐவனம் என்பது அயிவனம் எனவரும். ‘‘உடம்படு மெய்’’யின்றிவருதல் சான்றோர் வழக்கின்கண் காணப்பெறாமையின் பெற்றேவருமென்க. செய்யுளீட்டச்சொல்லாக, வைரம்-வயிரம்; கைலை-கயிலை எனவடசொற்கள் மாற்றெழுத்துப் பெற்றுவரும்.