சூ. 63 :

உஊ ஒஓ என்னும் நான்குயிர்

வஎன் எழுத்தொடு வருதல் இல்லை

(30)
 

க-து:

வகரமெய்    எட்டு   உயிரிசைகளொடு   கூடி   உயிர்மெய்யாய்
வருமென்கின்றது.
 

பொருள்:  வகரமென்னும் மெய்யெழுத்து   உஊஒஓ  என்னும்  நான்கு
உயிரிசைகளொடு கூடிமொழிக்கு முதலாக வருதலில்லை. ஏனையெட்டொடும்
கூடிவரும் என்றவாறு. ஒடுவை உயிரொடு கூட்டுக.
 

எ-டு:  வளை, வானம், விரல், வீடு, வெள்ளம்,  வேந்தன்,  வையம்,
வௌவுதல் எனவரும்.