சூ. 64 :

ஆஎ,

ஒஎனும் மூவுயிர் ஞகாரத் துரிய 

(31)
 

க-து:

ஞகரமெய் மூன்று உயிரிசைகளொடு கூடிவரும் என்கின்றது.
 

பொருள்:  ஞகாரம் என்னும்   மெய்   மொழிமுதலாதற்கு  ஆ, எ, ஒ
என்னும் மூன்று உயிரோசைகளும் உரியவாம்.
 

ஞகாரத்‘துரிய’ எனவே  உரிமையின்றி  நகரமெய்யின்  திரிபாக  வரும்
ஞகரத்திற்கு அகர இகர ஏகாரங்கள் சிறுபான்மை உரியவாதல் கொள்க.
 

எ-டு:  ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்  எனவரும்.  நகரத்  திரிபாகிய
ஞகரம்; (நரல)  ஞரல  (நமன்)  ஞமன் (நிமிரு)  ஞிமிரு (நேயம்)  ஞேயம்
‘ஞிமிறு’   வண்டாயின்    ‘‘கடிசொல்லில்லை’’    என்பதனாற்  கொள்க.
ஞமலி=நாய்.