பொருள்: யகரமெய் ஆ என்னும் உயிரிசையோடல்லது ஏனைய உயிரிசைகளொடு கூடிமொழி முதலாகாது. எ-டு யா, யாழ், யானை,யாங்கு எனவரும். ‘யவனர்’ என்பது திசைச் சொல். யவன் என்பது யாவன் என்பதன் விகாரம். இனி, யூபம் என்னும் “எழுத்தொடு புணர்ந்த’’ வடசொல் புறனடையாற் கொள்ளப்படும். யுகம், யூகம், யோகம், யௌவனம் முதலியவை இயையாது சிதைந்தனவாதலின் கொள்ளப்பெறா என்க. |