சூ. 67 : | குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் |
| ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் |
(34) |
க-து: | குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறும் அவ்வழி அதன் சார்பும் பற்றுக் கோடும் அமையுமாறும் கூறுகின்றது. |
பொருள்: சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலுகரஎழுத்து முறைப்பெயர்களுள் முன்னிலைப்பெயர் ஒன்றன் மருங்காகி, ஒற்றாய்நிற்கும் நகரப்புள்ளியின் மேல்உள்ள நகர மெய்யை ஊர்ந்து மொழிக்குமுதலாகும். எ-டு :நுந்தை. |
மெய்யெழுத்துக்கள் உயிரிசையோடு கூடி முதலாமாறு போல இச்சார்பெழுத்து உயிரியல்பாய் வந்து மெய்யொடுகூடி முதலாகும் என்க. துணையும் பற்றுக்கோடுமின்றிச் சார்பெழுத்துக்கள் தனித்தியங்காவாதலின் ‘‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்’’ என்றார். |
நுந்தை என்பதனுள் முதல் நகரம் பற்றுக்கோடு; இரண்டாவது நகரம் சார்பு. மொழியிறுதிக் குற்றியலுகரம் வல்லொற்றுக்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு வருதல்போல மொழிமுதற் குற்றியலுகரம் நகரமாகிய மெல்லெழுத்தினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வருமென்க. |