சூ. 69 :உயிர்ஒள எஞ்சிய இறுதி யாகும் 
(36)
 
க-து:இந்நூற்பா முதலாக மொழியிறுதி நிற்கும்  எழுத்துக்களைக்  கூறத்
தொடங்கி  இச்சூத்திரத்தான்  உயிர்   எழுத்துக்களுள்  ஈறாவன
கூறுகின்றார்.
 

பொருள்:  ஒளகாரஉயிர் தவிர்ந்த    ஏனைய    பதினொரு   உயிர்
எழுத்துக்களும் மொழி இறுதிக்கண் நிற்றற்கு ஆகும்.
 

எ-டு: ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ, ஐ, ஓஒ, ஓ  எனவரும்.
 

குற்றுயிர்கள் தனித்து ஈறாகா; அளபெடையின்கண் ஈறாகும் என்க. இனி
“ஈரள பிசைக்கும்   இறுதியில்   உயிரே”   (இடை-33)   எனப்பின்னரும்
வலியுறுத்துவார். ‘‘ஒள” என்பது குறிப்பிடைச் சொல்லாகவன்றிப் பெயராயும்
வினையாயும்  வாராமையான்  ‘‘ஒள’’  எஞ்சிய இறுதியாகும் என்றார். இது
மெய்யொடு கூடி ஈறாமாறு மேற்கூறுதலான் ஈண்டுக் கூறியது தனித்து ஈறாக
நிற்கும் நிலையை என்பது புலனாம்.