இயற்கையும் செயற்கையுமாதல் பற்றி இரண்டு மேற்கோள் கூறினார். மற்று, முன்னையது கால அளவையும் பின்னையது ஓசையளவையும் குறிக்கும் என்பார் ஒருசாரார். இங்ஙனம் இசையளவினை மாத்திரை எனக் குறியீடு செய்தது, பின்னர் ஆளுதற் பொருட்டென்க. மாத்திரை என்பது மா-(திறம்) திரம்-என்பவை இணைந்ததோர் ஒட்டுப் பெயர். மா-அளவு திரம்-நிலை |