சூ. 70 : | கவவோ டியையின் ஒளவு மாகும் |
(37) |
க-து: | ஒளகார உயிர் மெய்யொடு கூடி ஈறாம் என்கின்றது. |
பொருள்: மேல்விலக்கப்பட்ட ஒளகாரம் ககர வகர மெய்களொடு இணைந்த உயிர்மெய்யாயின் ஈறாக நிற்றற்காகும். |
உயிர்மெய் ஓரெழுத்தே எனினும் ஓசைபற்றிப் புணரியல் விதி கூறுதலானும் ‘‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’’ என்பது இலக்கணமாகலானும் ஈண்டுக்கூறும் மொழிநிலைகள் புணரியலுக்குக் கருவிகளாகலானும் ‘‘கவவோ டியையின் ஒளவு மாகும்’’ என்றார். |
எ - டு : கௌ - வௌ எனவரும். இஃது ஓரெழுத்தொரு மொழிக்கண்ணன்றி வராமையான், ‘ஒளவும்’ என இழிவு சிறப்பும்மை கொடுத்தோதினார்; அன்றி எச்ச உம்மை எனினும் ஆம். |
‘‘ஒள’’ அதிகாரப்பட்டமையானும் இறுதிநிலை பற்றிய இலக்கணமாகலானும் இறுதி நிரலாக இனிவருவனவற்றைக் கூறுகின்றார். (இறுதிநிரல் = இறுதியைத் தொடக்கமாக எண்ணுதல்) |