க-து:
பொருள்: எ எனப்படும் உயிர்எழுத்து மெய்யொடு கூடிமொழியீறாகவராது.
அளபெடையாக ஈறாகும் என்பது கருத்து. ‘‘ஈற்றுநின் றிசைக்கும் ஏஎன்இறுதி, கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே’’ (இடையியல்-38) என்பதனான்“மெய்யோடுகூடி ஈறாகுங்கொல்’’ என்னும் ஐயம் நீங்க, ‘ஆகாது’ எனவலியுறுத்தியவாறு.