சூ. 72 :ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே
(39)
 

க-து: 

ஒகரஉயிர் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய எகரமேயன்றி   ஒகரமும்   நகர   மெய்யொடு
கூடிவருதலல்லாத  இடத்து  அவ்விலக்கணத்ததேயாகும்.  என்றது;  ஒகரம்
நகரமெய்யொடு  கூடியல்லது   பிற  மெய்களொடுகூடி  மொழியிறுதிக்கண்
வாராதென்றவாறு.
 

எ - டு :  நொக்கொற்றா-நொஅலையல் எனவரும்.