|
சூ. 75 : | உச்ச காரம் இருமொழிக் குரித்தே | (42) | க-து: | தடுமாறாமல் முற்றியலுகரமாகவரும் உச்சகாரம் இரண்டே என்கின்றது. | பொருள்: சகரத்தொடு கூடிவரும் முற்றியலுகரம் இரு சொற்களுக்கு உரித்தாகும். | எ - டு: உசு, முசு எனவரும். பசு, வசு முதலியவை ஆரியச்சொற்கள். | அரசு, முரசு என்றாற்போலவரும் ஏனையவை, புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற்கேற்பன வாதலின் திரிபின்றி முற்றுகரமாக வருவன இவை இரண்டுமே என வரையறை கூறினார். |
|