‘இருவயின் நிலையும் பொருட்டாகும்’ என்பதற்கு உரையாசிரியன்மார் தன்வினையும் பிறவினையும் என இருபொருட்டாகும் என்பர். அப்பொருள் எடுத்தல், படுத்தல் என்னும் ஓசைக்குறிப்பாற் பெறப்படுவனவன்றிச் சொல்லாற்றலாற் பெறப்படுவனவல்ல. அங்ஙனம் குறிப்பாற்பொருள் தருவன கழி, வெளு முதலாகப் பல உளவாதலின் அவர் உரை பொருந்தாமையறிக. |
எ - டு: நகு, புகு, வகு, அது, இது, உது, அறு, இறு, பொறு, அடு, விடு, கொடு, நடு எனவரும். |