புள்ளியாகிய மெய்யெழுத்துக்களுள் மொழிக்கீறாவன கூறுகின்றது.
பொருள்: ஞண நமன யரல வழள என்னும் அப்பதினொரு புள்ளிமெய்களே மொழியிறுதியாக வரும். ஏகாரம் தேற்றம்.
எ - டு: உரிஞ், விண், வெரிந், வளம், வான், செய், வேர், வேல், தெவ், யாழ், வேள் எனவரும். வெரிந் என்பது வெந் எனவும் வரும். மெல்லெழுத்தாதல் இனம்பற்றி னகரத்தை இடையே சேர்த்துக் கூறினார்.