சூ. 8 :

ஒளகார இறுவாய்ப் 

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப  

(8)
 

க - து:
 

மேற்கூறிய  குறிலும்  நெடிலுமாகிய  எழுத்துக்களைத் தொகுத்து
அவற்றிற்குப் பொதுக்குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:   அகரமுதல்   ஒளகார   இறுவாயாக   உள்ள  எழுத்துப்
பன்னிரண்டும்  உயிர் எனப் பெயர்பெறும் என்று கூறுவர் ஆசிரியர்.
 

அகரமுதல்   என்பது  முதற்சூத்  திரத்தினின்று தந்துரைக்கப் பெற்றது.
‘‘பன்னிருகையும்   பாற்பட   இயற்றி’’  என்புழிப்  போல முற்றும்மைமாறி
நின்றது.     இவற்றை     ‘‘ஆவி’’     எனப்    பெயரிட்டுக்   கூறுதல்
பிறழ்வுணர்ச்சியாகும்.   உயிர்   போறலின்  உயிர் எனப்பட்டது என்பதும்,
அஃது உவம  ஆகுபெயர் என்பதும் அத்தகையனவேயாம். உயிர்-(உய்+இர்)
உயிர்த்தலை   உடையது   என்பது   இதன்பொருள்.  (பிறவிளக்கங்களை
எழுத்துக்களின்  குறியீட்டு  விளக்கம்  என்னும்  தனிக்கட்டுரையிற் கண்டு
கொள்க.)