ஞகரப்புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாகவரும் என்கின்றது.
பொருள்:ஞகாரம் மேற்கூறிய பகரஉகரத்தொடு ஒத்த நிலைமைத்து, ஆயினும் இது அதுபோலப் பொருள் இரண்டாகாது. என்றது; ஞகரப்புள்ளி தபு என்பதுபோல ஒருசொல்லில் மட்டும் ஈறாகவரும். எனினும் அதுபோல இது இருபொருள் தாராது என்றவாறு.
‘அப்பொருள்’ என்றது அதுபோல என்னும் பொருட்டாய் நின்றது. இவ் ஆடையும் அந்நூலானியன்றது என்புழிப்போல என்க. இவனை என்பதில் ஐகாரம் சாரியை.
எ - டு :உரிஞ் எனவரும்.
உவமப்படுத்து மாட்டேற்றுதற்பொருட்டு நகரத்தை முற்கூறினார். நகரஞகர ஈற்றனவாய்ச் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற் கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச் சொற்கள் இவையே என அறிதற்பொருட்டு இவற்றை எடுத்தோதினார் என்க.