சூ. 81 :வகரக் கிளவி நான்மொழி ஈற்றது
(48)
 

க-து:

வகரப்புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும் என வரையறை
கூறுகின்றது.
 

பொருள்: வகரமாகிய   புள்ளிஎழுத்து   நான்கு   சொற்களை  ஈறாக
உடையதாகும்.
 

எ - டு :  அவ், இவ், உவ், தெவ் எனவரும்.
 

கதவு,  புதவு,  வரவு  என்றாற்போல  வருவனவற்றுள்  இறுதி  உகரம்
சாரியை   என்பதை   உணர்ந்தோரும்   இவை   வகரஈறாம்    கொல்?
எனமயங்குதலின்  ஆண்டு நிற்கும் வகரமெய் சாரியை உகரத்தை ஏற்கவந்த
உடம்படுமெய்     என்பதை   உணர்த்த   வகர   ஈற்றுச்    சொற்களை
வரையறுத்தோதினார் என அறிக.