எ - டு : எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் எனவரும். இவை நச்சினார்க்கினியர் காட்டியவை. இச்சூத்திரத்து ஒன்பது என்னும் வரையறை தெளிவுபடுமாறில்லை. கடன், கவின் என்றாற் போல்வனவும் மகரமாக மயங்குதலின்மையின் இச்சூத்திரத்தின் பாடம் பிறழ்ந்திருக்கலாமெனக் கருதவேண்டியுள்ளது. |