சூ. 84 :

அவ்வழிப்,

பன்னீ ருயிரும் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் 

(2)
 

க-து:

இதுமுதல்   இந்நூலுள்  வகுத்துக்   கொண்ட  எழுத்துக்களின்
பிறப்பியல்  கூறத் தொடங்கி  முதற்கண்  உயிர்  எழுத்துக்கட்கு
வளியிசைக்களன் கூறுகின்றனர்.
 

பொருள்:மேற்கூறிய நெறிமுறைமையான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும்
தம்தன்மை     திரியாவாய்    மிடற்று    வளியினாற்    பிறந்திசைக்கும்.
தம்நிலையாவது  குறில்,  நெடில்,  மாத்திரையளவு  ஆகிய  தன்மைகளாம்.
வினைக்கள முயற்சி மேற்கூறுவார்.