சூ. 85 :அவற்றுள்

அஆ ஆயிரண்டு அங்காந் தியலும்
(3)
 

க-து: 

உயிரெழுத்துள் முதலிரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய உயிர்  பன்னிரண்டனுள்  அகரம்  ஆகாரமாகிய
இரண்டும்   அண்ணத்தின்   செயலாகிய    அங்காத்தல்    முயற்சியான் வெளிப்பட்டு இயலும். அங்காத்தல்=அண்ணாத்தல்.
 

இரண்டும் என்னும் உம்மை தொக்கது. முயற்சி ஒன்றாகக்  கூறப்படினும் அவைதம்முள் இசை வேறுபாடுடைய  என்பதறிவித்தற்கு  ஆயிரண்டு என
விளங்கக்   கூறினார்.   மேல்   வரும்   அப்பாலைந்தும்   என்பதற்கும்
இவ்விளக்கம்   ஒக்கும்.   ‘‘அங்காப்ப’’   என்னும் செயவெனச்சந் திரிந்து நின்றது.