சூ. 89 :ககார ஙகாரம் முதல்நா அண்ணம்
(7)
 

க-து:

மெய்களுள் இரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்: ககாரம்  ஙகாரம்   என்னும்   மெய்யெழுத்துக்கள்   அடிநா
அடிஅண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.
 

‘உற’  ‘இயலும்’  என்பவை   மேலைச்சூத்திரத்தினின்று  அதிகரித்தன.
பின்வரும் இரண்டு சூத்திரங்கட்கும் இஃதொக்கும்.