சார்பெழுத்துக்கள் மெய்யெழுத்துக்களின் பின்னாக வைக்கப்படுதலை இனி மேற்கூறுகின்ற முறைமையானும், குற்றியலுகரப் புணரியலைப் புள்ளிமயங்கியலின் பின்வைத்த முறைமையானும், தெரிந்து கொள்க. ‘‘மெய்’’ என்றது நா முதலிய பிறப்புறுப்புக்களான் அமையும் வடிவினை. இவை உயிர்போலத் தனித்திசைக்கும் இயல்பில்லாதனவாய் உயிர் மேவுதற்குரியவாய் உள்ளமையின், மெய் என்னும் பெயர் பெற்றன. மெய் எழுத்துக்கள் உயிரைச் சார்ந்து ஒலித்தலும் உயிரைமேவி இசைத்தலும் - வடிவுதிரிதலும், மயங்குதலுமாகிய பல தன்மைகளை உடைமையின் உயிரெழுத்துக்கு ஓதியாங்கு அதன் தன்மைகளை உடன்ஓதாராயினார். |