சூ. 99 : | அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை |
| கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் |
(17) |
க-து : | எஞ்சிநின்ற யகரமெய்க்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:யகரமெய், அண்ணத்தைச் சேர்ந்த, மிடற்றெழும் வளியிசையானது விளிம்புற்று நிற்கும் அடிநாவினை நெருங்கிப் பொருந்தப் பிறக்கும். |
அண்ணம் சேர்ந்த வளியிசை எனக்கூட்டுக. ‘‘மிடற்றெழுந்த’’ என்பது இனஞ்சுட்டி இயைபுநீக்கவந்த அடைமொழி. கண்ணுறுதல் = மிக நெருங்குதல். கண்ணுற்று அடைய என்பதற்கு அவாய்நிலையான், விளிம்புற்று நிற்கும் அடிநா என்பது செயப்படுபொருளாக வந்தது. |
மெய்யெழுத்துக்கள் செயலுறுப்புக்கள் தொழிற்பட்ட வழியல்லது பிறவாமையான், மிடற்றெழுவளியிசையான் மட்டும் பிறக்குமெனின் அஃது மேற்கோள் மலைவாம். வளியிசையான் மட்டுமே பிறப்பின் அஃது உயிரெழுத்தாவதல்லது மெய்யாகாதென அறிக. |