சூ. 135 : | அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே |
| அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே |
(43)
|
க - து : | அல்லகுறிப்படுதலும் அதற்கு ஏதுவும் ஆமாறு கூறுகின்றது. அது தலைவிக்கோதிய கிளவிகளுள் "இருவகைக் குறிப்பிழைப்பாகிய விடத்தும்" என ஓதப்பட்டதாகும். |
பொருள் :தான் குறியிடத்திற்கு வந்து சேர்ந்தமையைத் தலைவன் புலப்படுத்தும் அடையாளச் செய்கைகள் ஒரோவழித் தலைவனான் நிகழாமல் இயற்கையாக நிகழ, அதன் உண்மையறியாமல் தலைவன் செய்த குறியாக எண்ணி மயங்கிய அமைதியான் வரின் தலைவியிடத்து அல்லகுறிப்படுதலும் உரியதாகும். அல்லகுறி = குறியல்லாதகுறி. படுதல்=வருந்துதல். |
எ - டு : | இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் |
| கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் |
| எம்மினும் உயவுதி செந்தலை யன்றில் |
| கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ |
| நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே | (நச்-மேற்) |
இது தலைவன் குறிபொய்த்தான் என மயங்கியது. |
| இடுமணல் எக்கர் அகன்கானற் சேர்ப்பன் |
| கடுமான் மணியரவம் என்று - கொடுங்குழை |
| புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தான் சிறுகுடியர் |
| உள்ளரவம் நாணுவர் என்று |
(ஐந்-எழு-54) |
எனவரும். இஃது அல்லகுறி உற்றுமயங்கியது. |