சூ. 141 :

அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்

அங்கதன் முதல்வன் கிழவ னாகும்

(49)
 
க - து :
 

களவொழுக்கம்   புறத்தார்க்குப்   புலப்படுமாறும்    அதற்குக்
காரணம் ஆமாறும் கூறுகின்றது.
 

பொருள் : அயலவர்  நிகழ்த்தும்   அம்பலும்   தூற்றும்    அலரும்
தலைவியது   களவொழுக்கத்தைப்   பிறரறியப்   புலப்படுத்தும்.   அவை
அங்ஙனம் புலப்படுத்தலான் அதற்குக் காரணமாவான் தலைவனாவான்.
 

இரவுக்குறிக்கண்ணும்   பகற்குறிக்கண்ணும்   வந்து      செல்வானைக்
காண்டலான் களவு புலப்பாடாகும் என்க.
 

எ - டு :

"நீர்ஒலித் தன்ன பேஎர்

அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே".

(அகம்-211)
 

என்பதனான் தலைவன் காரணமாதல் அறிக.