சூ. 161 :

அவன்குறிப் பறிதல் வேண்டியும் கிழவி

அகமலி ஊடல் அகற்சிக் கண்ணும்

வேற்றுமைக் கிளவி தோற்றவும் படுமே

(18)
 

க - து :

ஊடற்காலத்து நிகழ்த்தும் தலைவி கூற்றிற்குரியதோர் இயல்பு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவனது   உள்ளக்குறிப்பினை    அறிய   வேண்டிய
விடத்தும்   தன்    மனத்தே  நிறைந்து   நின்ற   ஊடல்   நீங்குதலைச்
செய்யுமிடத்தும் தலைவற்குத்தான் வேறாயவள் போல அயன்மைப்படுத்துங்
கூற்றினைத் தலைவி தோற்றுவிக்கவும் பெறும்.
   

எ - டு :

யாரைநீ எம்மிற் புகுதர்வாய், ஓரும்

புதுவமலர் தேரும் வண்டேபோல் யாழ

வதுவை விழவணி வைகலும்காட்டினையாய்

மாட்டுமாட்டு ஓடி மகளிர் தரத்தர

பூட்டுமான் திண்டேர் புடைத்தமறுகெல்லாம்

பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை

காட்டிய வந்தெமைக் கைப்படுத்தேன் பண்டெலாம்

கேட்டும் அறிவேன் மன்யான்"

(கலி-98)
 

இதன்கண் ‘யாரை நீ’ என அயன்மைப்படுத்தியவாறு காண்க.