சூ. 163 :

அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி

பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே
 

க - து :

தலைவிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :அருளை  முதன்மையாக உடைய அன்பினை உட்பொதிந்த
சொற்களான்  தான்  கருதும்  பொருள்  விளங்கக்  கூறுதல்   தலைவிக்கு
உரியதாகும்.
 

எ - டு :

ஆங்க, கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்

இடையும் நிறையும் எளிதோ நிற்காணின்

கடவுபு கைத்தாங்கா நெஞ்சென்னும் தம்மொடு

உடன்வாழ் பகையுடையார்க்கு" (கலி-77) எனவரும்.