சூ. 165 :அலரிற் றோன்றும் காமத்து மிகுதி
(22)
 

க - து :

அலர் எழுதலான் எய்தும் பயன் கூறுகின்றது.
 

பொருள் :அலர் காரணமாகத்  தலைவன்  தலைவியரிடத்துக்  காதற்
காம உணர்வு மிக்கு விளங்கும்.
  

எ - டு :

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

(குறள்-1147)
 

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற்

காமம் நுதுப்பேம் எனல்

(குறள்-1148)
 

கௌவை = அலர். என்றாங்குக்காண்க.