பொருள் : பரத்தைமை காரணமாகத் தலைவன் இல்லற நெறியினின்று நெகிழ்ந்தொழுகாமற் காத்தல் தலைவியின் கடனென நூலோரான் கூறப்படுதலானும் புலவியைத் தணித்தல் வேண்டித் தலைவியிடத்தும் பணிமொழி கூறித் தாழ்தல் தலைவற்கு இயல்பாகலானும், புதல்வன் தாய் தலைவனை இடித்துரைத்து அறிவு மெய்ந் நிறுத்தலான் எய்தும் உயர்ச்சியும் தலைவனது உயர்ச்சியேயாகும். |