சூ. 181 :

அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர்

(38)
 

க - து : 

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  வாயிலுரைகள் அன்பின்  நீங்கிய கிளவியாகத்
தோன்றின்  அதுகேட்போர் சிறைப்புறத்தாராகக் கருதியதாகும் எனக்கூறுவர்
புலவர்.
 

தலைமக்கள் சிறைப்புறமாக இருக்குமிடத்துச் சிறுபான்மை அன்பிலாரைப்
போலக் கடிந்துரைத்தலும் உண்டு என்பது கருத்து.