சூ. 181 : | அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின் |
| சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர் |
(38) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய வாயிலுரைகள் அன்பின் நீங்கிய கிளவியாகத் தோன்றின் அதுகேட்போர் சிறைப்புறத்தாராகக் கருதியதாகும் எனக்கூறுவர் புலவர். |
தலைமக்கள் சிறைப்புறமாக இருக்குமிடத்துச் சிறுபான்மை அன்பிலாரைப் போலக் கடிந்துரைத்தலும் உண்டு என்பது கருத்து. |