பொருள் : தலைவி இற்செறிக்கப் பெற்றுக் காவலுற்ற நிலைமைக்கண் அவள் தமர்பால் செலுத்தும் அன்பும், குடிப்பிறப்பிற்குரிய நெறியும், ஆயத்தொடு விளையாடி மகிழும் இன்பமும், மறை புலப்படுத்தற்குத் தடையாகும் நாணமும், கருதாமல் அவற்றை நீங்கியொழுகும் ஒழுக்கம் பழியுடையதன்று ஆதலான் காப்புக் கைம்மிக்கவிடத்து அவற்றுள் யாதொன்றும் தலைவி கருதுதல் வேண்டாவாம். |