"கயமலர் உண்கண்ணாய்" என்னும் குறிஞ்சிக்கலியுள் | (37) |
"இனக்கிளி யாம்கடிந் தோம்பும் புனத்தயல் | |
ஊசலூர்ந் தாட ஒருஞான்று வந்தானை | |
ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத் | |
தையால் நன்றென்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு | |
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின் வாயாச்செத்து | |
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்" | |
என்றாற்போலத் தோழி கூற்றாக வருவனவும், |
புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை |
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் |
பலர்தில் வாழி தோழி அவருள் |
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி |
ஓர்யான் ஆகுதல் எவன்கொல் |
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே (அக-88) |
என்றாற் போலத் தோழி கூற்றாக வருவனவும் |
மள்ளர் குழீஇய விழவி னானும் |
மகளிர் தழீஇய துணங்கை யானும் |
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை |
(குறு-31) |
என்றாற் போலத் தலைவி கூற்றாக வருவனவும் தோழி நடுங்க நாட்டமாகவும், பல்வேறு கவர்பொருள் கூறி நாடுவனவும் பிறவுமாம். |