சூ. 288 : | அன்ன ஆங்க மான விறப்ப |
| என்ன உறழத் தகைய நோக்கோடு |
| கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம் |
(12) |
க - து : | வினை உவமத்திற்கு ஏற்கும் உவமச்சொற்கள் இவை என்கின்றது. |
பொருள் :தொழிற்றன்மை கருதிய அன்ன முதலாகிய எட்டும் வினையுவமத்தின் பாலாக வரும் உவமச்சொற்களாம். ஒடு எண்ணின்கண் வந்தது. கண்ணிய என்பதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. |
எ-டு: | 1. | எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து | (அகம்-106) |
| 2. | கயநாடி யானையின் முகனமர்ந்தாங்கு | (அகம்-6) |
| 3. | புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப்பிறழும் | (பெரு-269) |
| 4. | புலி விறப்ப ஒலி தோற்றலின் | (இளம்-மேற்) |
| 5. | புலி என்னக் கலி சிறந்தூராஅய் | ( " ) |