சூ. 173 : | உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் |
| நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே |
(30) |
க - து : | இளையோரது பண்பும், செயலும் காரணமாக அவரது சிறப்புக் கூறுகின்றது. |
பொருள் :உழையிருந்து குற்றேவல் புரிதலும், காவல் புரிதலும் உயர்ந்தோர் ஒழுக்கமாகிய நன்னடக்கையும் ஆகியவெல்லாம் இளையோர்க் கண்ணவாய் விளங்கும். |
இளையராயினும் பிழைபட ஒழுகார் என்பது விளங்க "உயர்ந்தோர் நடக்கை யெல்லாம் அவர்கட்படும்" என்றார். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. |