சூ. 204 :

உடம்பும் உயிரும் வாடியக் காலும்

என்னுற் றனகொல் இவையெனின் அல்லதை

கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை

(8)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :தன்மேனியும்       ஐம்புலத்துணர்வும்          தேய்ந்து
மெலிவுற்றபோதும்     இவை   உற்றதுயர்   என்கொல்? என அவற்றிற்கு
இரங்குவாள்     போலக் கூறினல்லது   தலைவன்    உறையும்    இடம்
நாடிச்செல்லுதல் தலைவிக்குப் புலனெறி வழக்கு ஆமாறில்லை.
 

எ - டு :

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து

(குறள்-1173)
 

எனவரும்
 

ஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

(குறள்-1176)
 

என்பன இதன்பாற்படும்.