என்றது : அவவக்காலத்தின்கண் சான்றோரான் வழங்கப் பெறும் சொற்கள் தொன்று தொட்டன அல்லவெனக் கருதாமல் மேற்கொள்ளல் வேண்டுமெனச் சொல்லதிகாரத்துள் ‘’கடிசொல் லில்லைக் காலத்துப் படினே’’ (எச்-56) என விதித்தாங்கு இப்பொருளதிகாரத்துள் களவு கற்பிற்கு அவ்வவ்வியல்களுள் ஓதிய விதிகளேயன்றி அவ்வக்காலத்து உயர்ந்தோர் வழக்காகி வந்து பொருந்துவனவும் கடியப்படா என்றவாறு. |