சூ. 177 :எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்
(34)
 

க - து : 

பகைவயிற்    பிரிவின்கண்  தலைவர்கட்   காவதோரிலக்கணம்
கூறுகின்றது.
 

பொருள் :பகைவயிற் பிரிந்த தலைமக்கள் மற்றாரை வெல்லுமாறுபற்றி
எண்ணும் அரிய பாசறையிடத்துத் தலைவியொடு சென்று பொருந்தியிரார்.
 

உம்மையான்    பின்முறையாக்கிய   மனைவியொடும்   தொன்  முறை
மனைவியொடும்   சென்று   பொருந்தியிரார்   எனக்கொள்க.  ‘புறத்தோர்
ஆங்கட்  புணர்வதாகும்’  எனமேல்  வருதலின்  ஈண்டுப்  பெண் என்றது
தலைவியை என்பது  தெளிவாம். எண்ணுதலாவது  தானைத்தலைவரொடும்
ஒற்றர் முதலாயினரொடும் சூழ்தல்.
 

ஒருகை பள்ளி யொற்றி ஒருகை

முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து

பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல்

நகைதாழ் கண்ணி நன்வலந் திருத்தி

அரசிருந்து பணிக்கும் முரசுமுழங்கு பாசறை

(முல்.74-78)
 

எனவருவனவற்றான் எண்ணுமாறறிக.