சூ. 180 :

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப

(37)
 

க - து : 

வாயிலுரை பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :   தலைவன்   தலைவியாகிய   இருவரிடத்தும்  பார்ப்பார்
முதலாய வாயிலோர்  கூறும் வாயிலுரையெல்லாம்  அவர்க்குப் பொருந்திய
மகிழ்ச்சி  தரும் பொருளினவாகும்  எனக் கூறுவர்  புலவர்.  தலைமக்கட்கு
மகிழ்ச்சி   தருவனவற்றையே   வாயிலார்  வாயிலாக  உரைப்பர்  என்பது
கருத்து.