என்றது : ஈதல் முதலிய அறங்களானும் கல்வி, கேள்வி, தவம், நோன்பு முதலிய பொருள்களானும் எய்துவதும் இன்பமேயாயினும் அவ் இன்பம் மக்கட் பிறப்பினர்க்கன்றி ஏனைய உயிர்கட்கெல்லாம் பொதுவாகாமையான் ஈண்டு இன்பம் என்றது உணர்வான் ஒன்றி மெய்யுற்று நுகரும் இன்பமே என்றவாறு. இதனான் அகப்பொருள் ஒழுகலாற்றின் பொருளியல்பு உணர்த்தப்பட்டது. |