பொருள் :எள்ள முதலிய எட்டும் பயனுவமத்திற்கு ஏற்கும் உவமச் சொற்களாம். |
எ-டு: | 1. | எழிலிவானம் எள்ளினன் வரூஉம் கவிகை வண்மைக் கடுமான் றோன்றல் | (இளம்-மேற்) |
| 2. | மழைவிழை தடக்கை வாய்வாளெவ்வி | (") |
| 3. | புத்தேளுலகிற் பொன்மரம் புல்ல | (") |
| 4. | விண்பொருபுகழ் விறல் வஞ்சி | (புறம்-11) |
| 5. | கார்கள்ள வுற்ற பேரிசையுதவி | (இளம்-மேற்) |
| 6. | இருநிதிமதிக்கும் பெருவள்ளீகை | (") |
| 7. | வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய் கூந்தல் மாஅயோளே | (ஐங்-324) |
| 8. | விரிபுனற் பேர்யாறு வீழயாவதும் | |
| | வரையாதுசுரக்கும் உரைசால் தோன்றல் | (இளம்-மேற்) |
எனவரும்.
|
இவை பயனுவமத்தின் பாலாதற்குக் காரணம் வருமாறு : |
என்ளுதல் என்பது இழிவு செய்தலாகலானும், விழைதல் என்பது மிக விரும்புதலாகலானும் புல்லுதல் என்பது புன்மையாதல் ஆகலானும் (தழுவுதல் என்னும் பொருளில் வரும் புல்லுதல் வேறு; இது வேறு என அறிக) பொருவுதல் என்பது மாறுகொள்ளுதலாகலானும் கள்ளுதல் என்பது மயங்குதலாகலானும் மதித்தல் என்பது வியத்தற் பொருட்டாகலானும் வெல்லுதல் மேற்படுதலாகலானும் (வாகையுள் இதனை முல்லை என்பார் சிலர்) வீழ்தல் என்பது தாழ்வுறுதலாகலானும் (விரும்புதல் என்னும் பொருள்படும் வீழ்தல் வேறு; இது வேறு) யாவும் அவ்வச்செயலான் வரும் பயனை வெளிப்படுத்தலின் இவை பயனுவமத்திற்குச் சிறந்துரிமையாயின. |