சூ. 205 : | ஒருசிறை நெஞ்சமொ டுசாவுங் காலை |
| உரிய தாகலும் உண்டென மொழிப |
(9) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் :ஒருமருங்கு தலைவி தன் நெஞ்சத்தொடு வினவி உரைக்குங் காலத்து, மேல், இல்லை எனப்பட்ட கிழவோன் உறையுமிடஞ் சேர்தல் உரியதாகலும் உண்டு என்று கூறுவர் புலவர். |
ஒரு சிறை = ஒரு கூறு. என்றது செயற்படுதலின்றிக் கூற்றாக நிகழுமிடத்து என்றவாறு. |
எ - டு : | கோடீர் இலங்குவளை நெகிழ நாளும் |
| பாடில கலுழும் கண்ணொடு புலம்பி |
| ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே |
| எழுஇனி வாழியென் நெஞ்சே முனாது |
| குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
| வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் |