சூ. 121 : | காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின் |
| தாமே தூதுவர் ஆதலும் உரித்தே
|
| (29) |
க - து : | களவுக் காலத்துத் தலைவன் தலைவிக்காவதோர் இயல்பு கூறுகின்றது. |
பொருள் : களவின்கண் தலைவனும் தலைவியும் கூடும் கூட்டம் தனிமையாற் பொலிவுறுதலான் பாங்காவார் இன்றித்ஒருவர்க்கொருவர் தாமே தூதுவராக அமைதலும் உரித்தாகும். |
பாங்கர் ஏதுவாகாவழித் தலைவனது பெருமையும் தலைவியது நாணும் சிறப்புறுதலின் அந்நிலை பொலிவுடையதாயிற்று. ஆண்டுத் தூதுமொழி களஞ்சுட்டுதலும் குறிசெய்துணர்த்துதலுமாகும். |