சூ. 162 :

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே

வழிபடு கிழமை அவட்கிய லான

(19)
 

க - து :

தலைமகட்குரிய தோரியல்பு தலைமகற்காகும் இடம் கூறுகின்றது.
  

பொருள் :தலைவனை   வழிபட்டுப்  பணிமொழி   கூறி   ஒழுகுதல்
மனையறத்தை  மேற்கொண்டொழுகும்  தலைவிக்கு இயல்பாகலான் (அவள்
பணிமொழி  காமவேட்கையான்  நிகழ்வதன்று)  காம  வேட்கை    இகந்த
விடத்து நிகழும் பணிந்த மொழி ஆராயுமிடத்துத் தலைவற்கு உரியதாகும்.
 

என்றது  :   காமங்கையிகந்தவிடத்துக்   கிழவோன்   தன்  தலைமை
நோக்காது  தலைவியைப்   பணிந்தொழுகுதல்   கற்பின்கண்  உரித்தாகும்
என்றவாறு.
 

எ - டு :

ஒரூஉ, கொடியியல் நல்லார் என்னும் மருதக்கலியுள்
(88)
 

"ஆயிழை

நின்கண்பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா

என்கண் எவனோ தவறு" எனவும்

"அதுதக்கது

வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை

தேற்றக்கண் டீயாய் தெளிக்கு" எனவும்,

தலைவன் பணிமொழி கூறியாறு கண்டு கொள்க.