க - து :
பொருள் : தலைவன் பரத்தையரொடு ஆடலும், பாடலும், யாறும்,குளனும் படிந்து நீராடலும் ஆகிய விளையாட்டினை மேற்கொள்ளும்அவ்விடத்தும் காதற்காம உணர்வு மிக்குத் தோன்றும்.
"எஃகுடை எழில் நலத் தொருத்தியொடு நெருநை
வைகுபுன லயர்ந்தனை என்ப அதுவே
பொய்புறம் பொதிந்து யாம்கரப்பவும் கையிகந்து
அலரா கின்றாற் றானே"
என வருதல் காண்க.