சூ. 155 : | கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள |
| நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும் |
| செவிலிக் குரிய வாகும் என்ப |
(12) |
க - து : | கற்பின்கண் செவிலி கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றது. |
பொருள் : இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்திற்கும் ஏற்புடையவாய் வழிவழித் தொடர்ந்து மேற்கொள்ளத் தக்கனவாய நற்பொருள்களை எடுத்துரைத்தலும் நல்லவையல்லாதவற்றைக் கடிந்துரைத்தலும் செவிலிக்குரியவாகும் எனக் கூறுவர் புலவர். |
எ - டு : | கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் |
| உட்குடையாள் ஊராண் இயல்பினாள்-உட்கி |
| இடனறிந் தூடி இனிதின் உணரும் |
| மடமொழி மாதராள் பெண் |
(நாலடி-384) |
இது நல்லவை கூறி அல்லவை கடிந்தது. |
"ஆகும்" என்றதனானே தலைவியின் இல்லற மாண்பினை உவந்து நற்றாய்க்குக் கூறுவனவும் கொள்க. |
பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் |
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப் |
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் |
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் |
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று |
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் |
பரிமலிந் தொழியப் பந்த ரோடி |
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி |
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் |
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் |
கொடுத்த தாதைக் கொடுஞ்சோ றுள்ளாள் |
ஒழுகுநீர் நுணங்கறல் போலப் |
பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே |
(நற்-110) |
|