சூ. 164 :களவும் கற்பும் அலர்வரை வின்றே(21)
   

க - து :

இருவகை  கைக்கோளிலும் அலர் கூறுதலைப் பற்றியதொருமரபு
கூறுகின்றது.
 

பொருள் :  களவின்கண்ணும்  கற்பின்கண்ணும்  அலர்  எழா நின்றது
எனக் கூறும் கூற்றுத் தோழிக்கும் தலைவிக்கும் நீக்கும் நிலைமையின்று.
 

தோழி   கூற்றும்  தலைவி  கூற்றும்    அதிகாரப்பட்டு    வருதலின்
அவ்விருவரும் கொள்ளப்பட்டனர்.
 

எ - டு :

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று

(குறள்-1146)
 

இதுகளவு.
 

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து

ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து

ஈங்கியான் தாங்கிய எவ்வம்

யாங்கறிந் தன்றிவ் அழுங்க லூரே

(குறு-140)
 

இதுகற்பு. இவை தலைவி கூற்று.
 

 

‘கரும்பின் எந்திரம்’ என்னுங் ஐங்குறுநூறு
(55)
 

தோழி அலர் கூறியது.