சூ. 199 : | கனவும் உரித்தால் அவ்விடத் தான |
(3) |
க - து : | அந்நிலைமைக்கண் கனாக்கண்டுரைத்தலும் உரித்தென்கின்றது. |
பொருள் : காமங் கண்ணியதாக வரும் நோயும் இன்பமுமாகிய நிலைமைக்கண் கனவு கண்டுரைத்தலும் தலைவன் தலைவியர்க்கு உரித்தாகும். |
உவமவாயிற் படுத்துக் கூறுதலேயன்றிக் கனவும் உரித்து என்றமையின் உம்மை எச்சவும்மை. |
எ - டு : | அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் |
| நலந்தா ராயோவெனத் தொடுப்பேன் போலவும் |
| கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் |
| புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும் |
| ..... ...... ....... கனவினாற் கண்டேன் தோழி! |
(கலி-128) |
இது தலைவி கனவு கண்டுரைத்தது. |
‘ஒழித்தது பழித்த’ என்னும் அகப்பாட்டினுள் |
(39) |
தலைவன் |
"இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு |
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு |
இன்னகை! இனைய மாகவும் எம்வயின் |