பொருள் :சான்றோரான் புகழப்பெற்ற பெருமிதமென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் கல்வி, தறுகண் இசைமை, கொடை என்னும் நான்குமாம் எனக் கூறுவர் புலவர். |
சொல்லுதல்-புகழ்ந்து கூறுதல். "சொல்லப்பட்ட" என்றதனான் கருத்தா வருவிக்கப்பட்டது. கல்வி முதலாய நான்கும் அறஞ்சாரா நெஞ்சத்தார் பாலாயவழி அவை பழிக்கு ஏதுவாதலு முடைமையான் "சொல்லப்பட்ட" என்றார். |
1. கல்வியாவது :அறமுதலாய மும்முதற்பொருள் பற்றிய நூலறிவும் இசைநாடகம் சிற்பம் முதலிய கலையறிவும் படைக்கலக்கல்வியும் பிறவுமாம். |
எ - டு : | மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் |
| மழுவுடைக் காட்டகத் தற்றே |
| எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே |
(புற-200) |
| முற்றிய திருவின் மூவ ராயினும் |
| பெட்பின் றீதல் யாம்வேண்டலமே |
(புறம்-205) |
என வரும். |
2. தறுகண்ணாவது : அஞ்சாமை. அஃதாவது பகைக்கும், பகைசெய்யும் பொருட்கும் அஞ்சாத மனத்திண்மையாகிய வீறு. |
எ - டு : | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
| மெய்வேல் பறியா நகும் |
(குறள்-774) |
| அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேல் |
| மன்றம் படர்வித்தனள் |
(கலி-41) |
எனவரும். |
3. இசைமையாவது : அறத்தாறொழுகும் நன்னடையானும் அருள் முதலாய உயர் பண்பானும் உலகுடன் பெறினும் பழியொடு வருவனபுரியா நெறியானும் ஊராண்மை முதலிய ஒப்புரவானும் கைம்மாறு கருதாத ஈகையானும் வரும் ஒளி. |
எ - டு : | "வலம்படு வான்கழல் வயவர் பெரும |
| நகையினும் பொய்யா வாய்மை, பகைவர் |
| புறஞ்சொற் கேளா புதைதீர் ஒண்மை |
| பெண்மை சான்று பெருமடம் நிலைஇக் |
| கற்பிறை கொண்ட கமழும் சுடர்நுதற் |
| புரையோள் கணவ" |
(பதிற்-70) |
எனவரும். |
| வடமீன் புரையும் கற்பின் மடமொழி |
| அரிவை தோள வல்லதை |
| நினதென இலைநீ பெருமிதத் தையே |
(பதிற்-122) |
என்பது மது. |
4. கொடையாவது :வரையாது வழங்கும் வண்மை. அஃது ஈகைபோலாது செல்வமேயன்றி உயிரும் உடம்புமாகிய பொருள் யாவற்றையும் வழங்குதலாம். |
எ - டு : | முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு |
| முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர் |
(புறம்-110) |
| பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் |
| நாடிழந் தனினும் நனியின் னாதென |
| வாள்தந்தனனே தலையெ மக்கீய |
(புற-165) |
| அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக் |
| கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் |
| தன்னகம் புக்கக் குறுநடைப் புறவின் |
| தபுதி யஞ்சிச் சீரை புக்க |
| வரையா ஈகை உரவோன்" |
(புறம்- ) |
எனவரும். |
"சொல்லப்பட்ட" என்றதனான் பல்லிருங்க கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே (புறம்-73) எனக் காமஒழுக்கம் பற்றி வரும் வீறும் பெருமிதமாக அடங்குமெனக் கொள்க. இவை நான்கும் தன் கட்டோன்றிய பொருள் பற்றிப் பிறக்குமென்க. |